Sunday 26 August 2018

குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்


பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. இப்போது பியர்டு மட்டுமே இருக்கிறான். இந்நகரம் அதன் தேவாலயத்திற்காகவும் மிருககாட்சி சாலைக்காகவும் பெயர் பெற்றது என்பதை அவனுக்கு நினைவூட்டியவள் “நீ சென்று பார்! அங்கெல்லாம் காண்பதற்கு இங்கரைவிடவும் நிறைய உள்ளது” என்றாள். தவிரவும் அவளுக்கு செய்து முடிக்கப்பட வேண்டிய வீட்டுக்காரியங்கள் காத்திருந்தன. பல் வைத்தியரின் சந்திப்பு ஒன்றையும் கூடவே உள்ளூர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் காகித மறுவடிவமைப்பு வகுப்புகளையும் அவள் தவறவிட்டிருந்தாள்.

மேலும் படிக்க

No comments:

Post a Comment